அடிக்கடி சோர்கிறேன்
மனதால் உடலால் --
அந்த அழைப்போ ?
அருகிலா?தொலைவிலா?
வயோதிக விசும்பல்
'முன்போல் இல்லை ' -
மனதின் வாசகம்
முள்போல் நெருடல் -
ஓ..எத்தனை வேலை
என்முன் தேக்கமாய் !
எண்ணச் சுமையில்
அமிழ்ந்தே தொலைகிறேன்-
என் மக்களுக்கான
எனது கடமைகள்
அதிலும் பாக்கி -
எழுதும் வேட்கையில்
கூனிக் கிடக்கிறேன் -
படிக்கும் ஆசையில்
படுத்துக் கிடக்கிறேன்
தூங்கியும் தொலைகிறேன் --
என்றோ படித்தது
நினைவில் எழுகுது -
'நன்றாக இருக்கிறேன் '
ஆழ்மூச்சு கொள்கிறேன்
விண்ணை நோக்கி
' என்னுள் சக்தி நிரப்பு '
ஆணையிடுகிறேன் --
சில நொடிகளில்
மாறிப் போகிறேன்--
என்னுள் எல்லாம்
சக்தியின் வெள்ளம் -
சோர்வு ஒழிந்திடத்
துள்ளி எழுகிறேன் -
எனக்குள் எங்கும்
இன்னிசைப் பொழிவே !
---சந்திர கலாதர்
--
--

No comments:
Post a Comment