Sunday, March 4, 2012

அடிக்கடி சோர்கிறேன் 
 
மனதால் உடலால் --
 
அந்த அழைப்போ ?
 
அருகிலா?தொலைவிலா?
 
வயோதிக  விசும்பல்
 
'முன்போல் இல்லை ' -
 
மனதின் வாசகம் 
 
முள்போல் நெருடல்  -
 
ஓ..எத்தனை வேலை 
 
என்முன் தேக்கமாய் !
 
எண்ணச் சுமையில்
 
அமிழ்ந்தே தொலைகிறேன்-
 
என் மக்களுக்கான 
 
எனது கடமைகள் 
 
அதிலும் பாக்கி -
 
எழுதும் வேட்கையில் 
 
கூனிக் கிடக்கிறேன் -
 
படிக்கும் ஆசையில் 
 
படுத்துக் கிடக்கிறேன் 
 
தூங்கியும் தொலைகிறேன் --
 
என்றோ படித்தது 
 
நினைவில் எழுகுது -
 
'நன்றாக இருக்கிறேன் '
 
ஆழ்மூச்சு கொள்கிறேன் 
 
விண்ணை நோக்கி 
 
' என்னுள் சக்தி  நிரப்பு '
 
ஆணையிடுகிறேன் --
 
சில நொடிகளில் 
 
மாறிப் போகிறேன்--
 
என்னுள் எல்லாம் 
 
சக்தியின் வெள்ளம் -
 
சோர்வு ஒழிந்திடத்
 
துள்ளி எழுகிறேன் -
 
எனக்குள் எங்கும் 
 
இன்னிசைப்  பொழிவே !
 
 
 
---சந்திர கலாதர்       

--

No comments:

Post a Comment