Thursday, December 6, 2012

பெண்களைப் பார்த்து
அழகிய பொய் சொல்லுங்கள் !
சத்தியம் உங்களைத் தண்டித்து விடாது -
பெண்ணும் கூடக் கொஞ்சம் நம்புவாள்
கண்ணாடி முன் நின்று
தலை சாய்த்துச் சரி பார்ப்பாள் !
'பெண் '-' பொய் ' ஒற்றுமை பாருங்கள்
ஈரெழுத்தாய் மெய்யும் ஒற்றுமாய்
எத்தனை பொருத்தம் !
சத்தியம் கேட்டால்
சொல்லிக் கொள்வோம்
'இந்நொடி எனக்கிவள்
ஆசைப் பிழம்பில்
வான் தேவதையே ! '--
அதன் தலையில் அடித்தே
சத்தியம் செய்வோம் !
பொய்யைக் கலந்துதான்
பெண்ணைப் படைத்தான்
---சந்திர கலாதர்
06.12.2012 /வியாழன் / கார்த்திகை 21
பிற்பகல் 2 மணி
--

No comments:

Post a Comment