Monday, April 25, 2011

THE STORMY PETREL BHARATHI !

கவிதைப் புயல் பாரதி !

அன்று..

குண்டும் குழியுமாய்

முட்டி மோத வைத்த

தமிழ்ச் சாலையிலே

இவன் ..

தீயினைத் தேராக்கி

விழியினை வில்லாக்கி

மின்னலை அம்பாக்கி

இடிகளைச் சொல்லாக்கி

புரட்சி மழையாய்

மடமை இடிக்க வந்தான் !

அடிமைக் குடிமையை

அடியோடு தகர்த்திட

ஆவேசம் பொங்கும்

கவிதைப் புயலானான் !

@

ஆனால்..

இயற்கை தொட்டதும்

இறக்கை விரித்துப்

பூக்கோலம் பூண்டு

தென்றலாய்த் திரிந்திருந்தான் !

குழந்தை முத்தமாய்

தமிழ்ச் சொற்களால்

தழுவி அணைத்திடுவான் !

@

இவன் ஒருவன்தான்

நாக்கோடு நெஞ்சையும்

நடையோடு உதட்டையும்

இணைத்துப் பிணைத்த

பித்தன் என்றானான் !

@

இவன்தான் பாரதி !

இவன் பாக்களோ

ரதி அழகு !

இவன் நெஞ்சில்

சுமந்ததோ தீ !

புனிதத் தீ !

இவன் பாடினால்

அதிருமே பார் !

இவனைப்

'பார் அதி நேரம்' எனக்

கெஞ்சுமே நம் விழி !


--சந்திர கலாதர்

No comments:

Post a Comment