Friday, June 10, 2011

O..HOW I AWAIT HER !

உன்னத இதயமே ..வாராயோ !

எத்தனை எத்தனை அச்சுறுத்தும் ரகசியங்கள் !
ஒளி உமிழ் கற்பனைகள் !
எண்ண மண மலர்கள் !
கண்ணீர் மல்கும் சோக நினைவுகள் !

ஓ !
ஆழப் புதையுண்ட என் மனதின்
அச்சுறுத்தும் அறைகளின்
கரிய மூலை முடுக்குகளில்
மறைத்தும் புதைத்தும் வைக்கப்பட்டுள்ளன --

ஓ ! நினைவுகளே !
நீங்கள் ஏன் மக்கிப் போவதில்லை ?

உயர்த்திய தன் கரத்தில்
அலைபடாது எரியும்
ஓர் கருணைத் தீபம் ஏந்தி --

உயிர் மூச்சே மென் தென்றலாய்
இதயத்தை இதமாய்த் தடவி --

உண்மை அன்பின் வெம்மையில்
என் சந்தேகங்களைக் கரைத்து
ரகசியங்களை வாரி இறைத்திடா
உத்தம நெஞ்சோடு --

நள்ளிரவு வேளைதனில்
பைத்தியமாய் மனம்
பரபரக்கும் வேளையில் --

உள்ளங்கையோடு
தேற்றிடும் தன் கை பிணைத்து --

என் மன இருட் குகைகளைப்
பொறுமையாய் ஆராய விழையும் --

ஓ !
அந்த உன்னத இதயத்திற்காக
எப்படி ஏங்கித் துடிக்கிறேன் !

-----சந்திர கலாதர்

No comments:

Post a Comment